வித்யாசம்
பள்ளி - பாடம் படித்த பின்பு சோதனை
வாழ்கை - சோதனைக்கு பின்பு பாடம்
பள்ளி- கற்றுகொடுபவரெல்லாம் ஆசிரியர்
வாழ்கை-யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்
பள்ளி-கால அட்டவணை
வாழ்கை-கடந்த காலம் தான் அட்டவணை
பள்ளி-படித்தும் முட்டாள் ஆக்குகிறது
வாழ்கை-படிக்காட்டியும் மேதை ஆக்குகிறது
பள்ளி-காதலை கூட அரும்ப வைக்கும்
வாழ்கை-கடமையால் காதலை கூட இழக்க வைக்கும்
பள்ளி-பட்டம் பெறுவதற்கு
வாழ்கை-பட்டு திருந்துவதற்கு
பள்ளி- தேர்வில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் சந்தர்பம் தருகிறது
வாழ்கை-ஜெய்தவன் என்று மார்தட்டி கொண்டாலும் மரணம் காத்திருக்கிறது
பள்ளி-புத்திசாலிகளை உருவாகிறது
வாழ்கை-ஞானிகளை உருவாகிறது
ஒரே ஒற்றுமை
--------------------------
இரண்டிலுமே படித்துகொண்டே இருக்கிறோம்( தேர்ச்சி பெருகிரோமோ இல்லையோ )
பள்ளியில் பாடத்தை..
வாழ்கையில் நம்மை ..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யோசிக்கிறேன்
பெண்
இவளை போற்றாத கவிஞர் இல்லை..
பார்த்து மயங்காத ஆடவர் இல்லை..
இவள் பெயர் இல்லாத நதி இல்லை..
இவள் ஒப்பிடாத அழகான பொருள் இல்லை..
காவியம் ஆக்குகிறாள்,காவி துறவியையும் மாற்றுகிறாள்...
ஆனாலும்,
ஏன் இவளை சக மனுஷியாக மட்டும் இந்த உலகம் நினைப்பதில்லை?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏக்கம்
ஆயிரம் திட்டு வாங்கினாலும்,
அம்மா கையால்
திகட்டாத சாப்பாடு எங்கே?
கையில் பிரம்புடன்
வாசலில் நின்றாலும்
கரும்பாய் இனிக்கும் அப்பா எங்கே?
வீட்டில் அறைகள்
குறைவாக இருப்பினும்
மனம் நிறைந்து இருந்ததே?
தொலை தொடர்பு வளர்ந்து விட்டது
அனால் அன்பு தொல்லைகள்
குறைந்து விட்டதே..
பாதி ஜிலேபிக்கு சண்டை போட்டாலும்,
பாதி இரவில் கண் விழித்து எனக்காக
அயல் நாட்டில் இருந்து
அழைக்கும் அண்ணன் தம்பிகளின் குரல்...
கைபேசியும்,தொலை(தொல்லை) பேசியும்
மின்னஞ்சலும் ,குறுந்தகவல்களும்
இன்று குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டதே...
மகளிர் விடுதி,என் அறையில் இருந்து........
தனிமையில்......
நான்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : இந்த படைப்புgal என் சுய முயற்சி,மறுமொழி வரவேற்கப்படுகிறது
--
--
என்றும் அன்புடன்,
சிந்தியா பிரான்சிஸ்